ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து செயல்படுவதாக நம்பப்படும் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பயங்கரவாதிகளை குற்றவாளிகளாக தோடா சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து தேடப்படும் குற்றவாளிகளின் மொத்த எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் முன் ஆஜராக வேண்டும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இல்லையென்றால் அவர்களின் சொத்துக்களும் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கெனவே 12 பயங்கரவாதிகளின் சொத்துக்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கலீல் போஸ்வால் கூறினார்.