கனடா தாதா கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிப்பு!
Jun 4, 2026, 03:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா தாதா கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவைச் சேர்ந்த கோல்டி பிராரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கௌர் ஆகியோரின் மகன் சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி ப்ரார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்டவர். இவர்தான் மத்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த கோல்டி பிரார், வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்புடன் இணைந்து, நம் நாட்டு தலைவர்களை கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

மேலும், ஆயுதக் கடத்தல், எல்லை தாண்டி தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் கோல்டி பிரார் ஈடுபட்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார். இதனால், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறார்.

ஆகவே, கோல்டி பிராருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. மேலும், ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் வாயிலாக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ விடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கோல்டி பிரார் பாபர் கல்சா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். பாபர் கல்சா இன்டர்நேஷனல் ஒரு தீவிரவாத அமைப்பாக மத்திய அரசால் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, கனடாவைச் சேர்ந்த பாபர் கல்சா உறுப்பினரான லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருந்தது. தற்போது அதே அமைப்பைச் சேர்ந்த கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Tags: DeclaredGoldy BrarCanadaterroristhome ministry
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 48-ஆக உயர்வு!

Next Post

23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!

Related News

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies