பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!
Oct 2, 2025, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!

வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்தியர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் ஆகியோரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதேபோல, இந்தியாவும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

அதேசமயம், தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள குடிமக்கள், மீனவர்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ம் தேதியும், ஜூலை மாதம் 1-ம் தேதியும் இரு நாடுகளும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளும் தங்களது சிறைகளில் இருக்கும் குடிமக்கள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை பரிமாறிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படும் 81 மீனவா்கள் உட்பட 418 பேர் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா பகிர்ந்திருக்கிறது.

அதேபோல, இந்தியர்கள் என்று நம்பப்படும் 184 மீனவர்கள் உட்பட 231 போ் குறித்த தகவலை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் நாடு அளித்த பட்டியலின்படி, 184 இந்திய மீனவா்கள் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் இன்னும் அந்நாட்டுச் சிறையில் இருந்து வருகிறார்கள்.

ஆகவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2,639 இந்திய மீனவர்கள், 67 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, கடந்த ஆண்டில் மட்டும் 478 இந்திய மீனவர்கள், 9 இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiapakistaninsistreleasePrisoners
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : வெல்லப்போவது யார்?

Next Post

துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்! – அண்ணாமலை

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies