பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும்!

வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்தியர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் ஆகியோரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதேபோல, இந்தியாவும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

அதேசமயம், தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள குடிமக்கள், மீனவர்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ம் தேதியும், ஜூலை மாதம் 1-ம் தேதியும் இரு நாடுகளும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இரு நாடுகளும் தங்களது சிறைகளில் இருக்கும் குடிமக்கள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை பரிமாறிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படும் 81 மீனவா்கள் உட்பட 418 பேர் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா பகிர்ந்திருக்கிறது.

அதேபோல, இந்தியர்கள் என்று நம்பப்படும் 184 மீனவர்கள் உட்பட 231 போ் குறித்த தகவலை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் நாடு அளித்த பட்டியலின்படி, 184 இந்திய மீனவா்கள் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் இன்னும் அந்நாட்டுச் சிறையில் இருந்து வருகிறார்கள்.

ஆகவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2,639 இந்திய மீனவர்கள், 67 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, கடந்த ஆண்டில் மட்டும் 478 இந்திய மீனவர்கள், 9 இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: IndiapakistaninsistreleasePrisoners
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : வெல்லப்போவது யார்?

Next Post

துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்! – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies