வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!
Sep 9, 2025, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதில், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த மதுபானக் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், அந்த சம்மன் அரசியல் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், அமலாக்கத்துறையிடம் அஜராகவில்லை. எனவே, அவருக்கு 2-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், யோகா பயிற்சிக்குச் செல்வதாகக் கூறி ஆஜராகவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு 3-வது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணத்தார்.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், “அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டுக்குச் செல்லும் சாலைகளையும் தடுப்புகள் வைத்து அடைத்திருக்கின்றனர்.

அதோடு, அவரது அலுவலக பணியாளர்கள் உட்பட யாரையும் போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: delhiEnforcement DirectorateCm Arvind KejriwalPolice Protection
ShareTweetSendShare
Previous Post

இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Next Post

சபரிமலை டைரியில் பினராயி விஜயன் படம்: பக்தர்கள் எதிர்ப்பு!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies