வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!
Jan 14, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதில், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த மதுபானக் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், அந்த சம்மன் அரசியல் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், அமலாக்கத்துறையிடம் அஜராகவில்லை. எனவே, அவருக்கு 2-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், யோகா பயிற்சிக்குச் செல்வதாகக் கூறி ஆஜராகவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு 3-வது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணத்தார்.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், “அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டுக்குச் செல்லும் சாலைகளையும் தடுப்புகள் வைத்து அடைத்திருக்கின்றனர்.

அதோடு, அவரது அலுவலக பணியாளர்கள் உட்பட யாரையும் போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: delhiEnforcement DirectorateCm Arvind KejriwalPolice Protection
ShareTweetSendShare
Previous Post

இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Next Post

சபரிமலை டைரியில் பினராயி விஜயன் படம்: பக்தர்கள் எதிர்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies