தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!
Oct 4, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம்: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா தற்போது புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக உள்ளது என்றும், தேச நலனை கருத்தில் கொண்டே தனது அரசு ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம், லட்சத்தீவு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, தமிழகம், லட்சத்தீவில் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் மேலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “தேச நலனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. நேஷன் ஃபர்ஸ்ட் என்ற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதால், எந்தவொரு கடினமான முடிவும் எனக்கு கடினமாகத் தெரியவில்லை.

மோடியின் உத்தரவாதம் என்பது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சூத்திரம் அல்ல. ஏழைகளின் நம்பிக்கையே உத்தரவாதம். மோடி தனது கடமையிலிருந்து பின்வாங்க மாட்டார் என்பது இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் தெரியும்.

பின்தங்கியதாக உணர்ந்த ஒரு நாட்டிலிருந்து, இந்தியா இப்போது முன்னணியில் இருந்து முன்னேறி, புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக மாறி இருக்கிறது.இது இந்தியாவின் தருணம் என்பது இன்று உலக ஒருமித்த கருத்து தெளிவாக உள்ளது.

“ஜன் அந்தோலன்”கள் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் மற்றும் விளைவு சார்ந்த கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய இலக்குகளை அடைய முடியும் என்பதை நான் நம்புகிறேன். 2014-ல் நான் பிரதமரானபோது, ​​இந்தியாவின் பொருளாதாரத்தின் அளவு 2 டிரில்லியன் டாலர்கள்.

அதேசமயம், 2023-24 இறுதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.75 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும். உள்கட்டமைப்புக்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது அனைவரும் அறிந்ததே.

உள்கட்டமைப்பு உருவாக்கம் இதுவரை கண்டிராத வேகத்தில் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அனைத்துத் துறைகளும் தற்போது சிறப்பாக செயல்படுகின்றன.

ஜம்மு காஷ்மீரில் நீடித்த அமைதியை உறுதி செய்யும் விவகாரத்தில், பாதுகாப்பு, மேம்பாடு, உள்கட்டமைப்பு, மனித மூலதனத்தில் முதலீடு மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசாங்க செயல்முறைகளை முழுமையாக மறுசீரமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பலமுனை அணுகுமுறையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.

Tags: PM ModiPrees Meet
ShareTweetSendShare
Previous Post

திமுக கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது! – அண்ணாமலை

Next Post

மின்சார கார்களுடன் பசுமை யாத்திரைக்கு தயாராகும் அயோத்தி!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies