மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!
Sep 9, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து சக்தி சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான கனிமொழி, வரவேற்புக் குழு தலைவி கிருஷ்னவேணி ஆகியோர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பாரதத்தைப் பொறுத்தவரை பெண்கள் பக்தியிலும், ஞானத்திலும், வீரத்திலும், குடும்பத்தை நிர்வாகிப்பதிலும் எப்போதுமே சிறந்து விளங்கி வருகிறார்கள்.

நமது பாரத நாட்டில் மட்டுமே பெண்களின் கண்ணியமும், மரியாதையும், மாண்பும் எப்பொழுதும் போற்றப்பட்டு வருகிறது. இப்படி பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

பாரத தேசம் முழுவதும் இதுவரை 220 சக்தி சங்கமம் மகளிர் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்த மாநாடுகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் நிலையில், மகளிரின் ஒருங்கிணைந்த சக்தியை சமூகத்தில் நிலைநாட்டுதல் மிகவும் அவசியம் என்ற எண்ணத்தில் மதுரையில் சக்தி சங்கமம் என்ற பெயரில் மகளிர் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பில், ராஜா முத்தையா மன்றத்தில் வரும் 6-ம் தேதி பெண்களுக்கு பெண்களால் பெண்களின் மாநாடாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள், காலை 9 மணியளவில் பாரதிய பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் தொடங்குகின்றன.

தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பூஜனீய யதீஷ்வரி கதாதப்பிரியா அம்பா ஆசியுரை வழங்குகிறார். பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவிதாசி தலைமையுரை ஆற்றுகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மதியம் 12:30 மணியளவில் இன்றைய சூழலில் பெண்கள் துறை ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி, விவேகானந்த கேந்திரத்தின் சாஹித்யா சேவா ப்ரமுக் டாக்டர் கீதா ரவி மற்றும் மத்திய அரசின் தேசிய மாற்றுத் திறனாளி துறை ஆலோசகர் காமாக்ஷி ஸ்வாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மதியம் 2:30 மணியளவில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விளக்கவுரை ஆற்றுகிறார். தென் தமிழக மகளிர் ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் கனிமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இந்த சக்தி சங்கமம் நிகழ்ச்சியில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகரைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: MaduraiSakthi SangamamJanuary 6th
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் 2024 : ஜன.8-ல் இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை! 

Next Post

இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Related News

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies