மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 4, 2024, 05:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து சக்தி சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான கனிமொழி, வரவேற்புக் குழு தலைவி கிருஷ்னவேணி ஆகியோர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பாரதத்தைப் பொறுத்தவரை பெண்கள் பக்தியிலும், ஞானத்திலும், வீரத்திலும், குடும்பத்தை நிர்வாகிப்பதிலும் எப்போதுமே சிறந்து விளங்கி வருகிறார்கள்.

நமது பாரத நாட்டில் மட்டுமே பெண்களின் கண்ணியமும், மரியாதையும், மாண்பும் எப்பொழுதும் போற்றப்பட்டு வருகிறது. இப்படி பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

பாரத தேசம் முழுவதும் இதுவரை 220 சக்தி சங்கமம் மகளிர் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்த மாநாடுகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் நிலையில், மகளிரின் ஒருங்கிணைந்த சக்தியை சமூகத்தில் நிலைநாட்டுதல் மிகவும் அவசியம் என்ற எண்ணத்தில் மதுரையில் சக்தி சங்கமம் என்ற பெயரில் மகளிர் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பில், ராஜா முத்தையா மன்றத்தில் வரும் 6-ம் தேதி பெண்களுக்கு பெண்களால் பெண்களின் மாநாடாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள், காலை 9 மணியளவில் பாரதிய பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் தொடங்குகின்றன.

தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பூஜனீய யதீஷ்வரி கதாதப்பிரியா அம்பா ஆசியுரை வழங்குகிறார். பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவிதாசி தலைமையுரை ஆற்றுகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மதியம் 12:30 மணியளவில் இன்றைய சூழலில் பெண்கள் துறை ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி, விவேகானந்த கேந்திரத்தின் சாஹித்யா சேவா ப்ரமுக் டாக்டர் கீதா ரவி மற்றும் மத்திய அரசின் தேசிய மாற்றுத் திறனாளி துறை ஆலோசகர் காமாக்ஷி ஸ்வாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மதியம் 2:30 மணியளவில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விளக்கவுரை ஆற்றுகிறார். தென் தமிழக மகளிர் ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் கனிமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.

சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இந்த சக்தி சங்கமம் நிகழ்ச்சியில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகரைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: MaduraiSakthi SangamamJanuary 6th
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் 2024 : ஜன.8-ல் இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை! 

Next Post

இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies