ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!
Jan 14, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால், அத்தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 199 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, மத்திய பார்வையாளர்கள் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பஜன்லால் ஷர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல, துணை முதல்வர்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் பதவியேற்றனர். இதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 22 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

ஆனால், பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், இலாகா தொடர்பான பரிந்துரையை முதல்வர் பஜன்லால் ஷர்மா, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அனுப்பி வைத்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அந்த வகையில், முதல்வர் பஜன்லால் ஷர்மாவுக்கு உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உட்பட 8 துறைகளும், துணை முதல்வர்களில் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளும், பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறையும், முக்கிய நிர்வாகிகளான கஜேந்திர சிங் கிம்சாருக்கு சுகாதாரத் துறையும், மதன் திலாவருக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Tags: MinistersRajastanPortfolio
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மீனவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பாஜக நிர்வாகிகள்

Next Post

இந்தியாவில் புதிதாக 774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies