தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி, விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட காலமாகப் போராடி வந்தது. இது தொடர்பாக, இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்தது.

இப்போரில், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதோடு, அந்த இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டது.

இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் இணைந்து, 1987-ம் ஆண்டு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.

அதாவது, அரசியலமைப்புச் சட்டம் 13ஏ தமிழ்ச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

ஆகவே, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில், இந்தியாவும் தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “இந்த 13-வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.

மேலும், இதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.

இதனால், இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

Tags: tamilarIndependent RuleRanil wickremesinghesrilankaPresidentSupport
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

Next Post

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies