தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!
Jul 25, 2025, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி, விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட காலமாகப் போராடி வந்தது. இது தொடர்பாக, இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்தது.

இப்போரில், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதோடு, அந்த இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டது.

இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் இணைந்து, 1987-ம் ஆண்டு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.

அதாவது, அரசியலமைப்புச் சட்டம் 13ஏ தமிழ்ச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

ஆகவே, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில், இந்தியாவும் தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “இந்த 13-வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.

மேலும், இதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.

இதனால், இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PresidentSupporttamilarIndependent RuleRanil wickremesinghesrilanka
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

Next Post

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies