தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி, விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட காலமாகப் போராடி வந்தது. இது தொடர்பாக, இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்தது.

இப்போரில், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதோடு, அந்த இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டது.

இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் இணைந்து, 1987-ம் ஆண்டு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.

அதாவது, அரசியலமைப்புச் சட்டம் 13ஏ தமிழ்ச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

ஆகவே, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில், இந்தியாவும் தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “இந்த 13-வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.

மேலும், இதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.

இதனால், இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.

Tags: tamilarIndependent RuleRanil wickremesinghesrilankaPresidentSupport
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

Next Post

கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies