மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதலாக 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், திடீரென நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆகவே, நிதீஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பீகாரில் பல்வேறு பேரணிகளில் உரையாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஜனவரி 15-ம் தேதிக்குப் பின்னர் முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி, மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா, ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி 3 பேரணிகளில் உரையாற்றுகிறார்.

அதேபோல, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாளந்தா ஆகிய இடங்களில் அமித்ஷா உரையாற்றுவார். ஜெ.பி.நட்டா சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தவிருக்கிறார்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரின் சம்பாரனில் இருந்து தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, ராமன் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மேலும், இப்பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி பீகார் முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால் , கட்சியின் மாநில அமைப்பு தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Tags: PM ModiBiharelection compaignJanuary 13th
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமரின் பக்திப் பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

கோல்டன் குளோப் விருது : வெற்றியாளர்கள் பட்டியல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies