மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!
Jun 15, 2026, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: ஜனவரி 13-ல் பீகாரில் தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதலாக 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், திடீரென நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆகவே, நிதீஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பீகாரில் பல்வேறு பேரணிகளில் உரையாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஜனவரி 15-ம் தேதிக்குப் பின்னர் முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி, மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா, ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி 3 பேரணிகளில் உரையாற்றுகிறார்.

அதேபோல, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாளந்தா ஆகிய இடங்களில் அமித்ஷா உரையாற்றுவார். ஜெ.பி.நட்டா சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தவிருக்கிறார்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரின் சம்பாரனில் இருந்து தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, ராமன் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மேலும், இப்பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி பீகார் முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால் , கட்சியின் மாநில அமைப்பு தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Tags: election compaignJanuary 13thPM ModiBihar
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமரின் பக்திப் பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

கோல்டன் குளோப் விருது : வெற்றியாளர்கள் பட்டியல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies