பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் : வண்ண கோலங்களின் வரலாறு !

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி மாதம் என்றால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆங்கில புத்தாண்டுதான். ஆனால் தமிழர்களுக்கு ஜனவரி மாதம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தமிழர்களின் பொங்கல் திருநாள் தான்.

பொங்கல் அன்று பல வண்ணங்களில் புத்தாடை அணிந்து, வண்ண வண்ண கோலமிட்டு கொண்டாடுவோம். மற்ற நாட்களில் வண்ண கோலமிடுவதை விட பொங்கல் அன்று தான் அனைவரின் வீட்டிலும் வண்ண கலர் கொடுத்து கோலமிடுவர்.

பல கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டிகளும் கூட வைக்கபடும். மற்ற நாட்களில் பகலில் தான் கோலமிடுவோம். ஆனால் பொங்கல் திருநாளில் தெருவில் உள்ள அனைத்து பெண்களும் தங்களின் வீட்டிற்கு முன்பே இரவிலேயே கோலமிடுவர்.

பல பெண்கள் இப்படி கோலமிடுவதற்காகவே பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். இப்படி பொங்கல் திருநாளில் கோலத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு.

இந்த கோலங்கள், கம்பிக்கோலம், பாம்புக் கோலம், தாமரைக் கோலம், புள்ளிக் கோலங்கள், நேர்ப்புள்ளிக் கோலங்கள், தொட்டில் கோலம், புள்ளிகளிடையே வரையும் கோலம், ஊடுபுள்ளிக் கோலங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன.

5 வயதை கடக்கும்போது கோலமிடப் பழகும் சிறுமிகள், 90 வயது முதுமையிலும் தங்களது வீ்ட்டின் முற்றத்தில் ஆர்வத்தோடு கோலமிடுகிறார்கள். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது. பொதுவாக தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாக போடக்கூடாது. காரணம் அந்த கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் வீட்டின் வாசலில் ரங்கோலி கோலங்கள் போடுவதால் நல்ல எண்ணங்கள் தோன்றுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. கோலங்களில் வண்ணமிடுவதால் அந்த கோலம் அழகாக மாறுகிறது. எனினும் அந்த நிறங்கள் மனிதர்களின் எண்ணங்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆகவே வண்ண வண்ண கோலமிட்டு இப்பொங்கல் பண்டிகையை வண்ண மையமாக கொண்டாடுவோம்

Tags: rangoliPongal festival
ShareTweetSendShare
Previous Post

மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!

Next Post

பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies