ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோபத்தில் ரசிகர் ஒருவரை பளாரென அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசம் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன். 2006ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் ஷகிப் அல் ஹசன், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும், ஷகிப் அல் ஹசனை நம்பியே அந்த அணி இருந்து வந்தது. சமீபத்தில் அதிக முறை உலகக்கோப்பை தொடரில் ஆடிய வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் 36 வயதாகும் ஷகிப் அல் ஹசன், தற்போது அரசியல் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே வங்கதேச அணியின் கேப்டனாக இருந்த மோர்டசா, ஆளும் கட்சியிம் எம்பி-யாக இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், மகுரா வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், ஷகிப் அல் ஹசனை சுற்றிய ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஷகிப் அல் ஹசனிடம் ரசிகர்கள் எல்லை மீற, திடீரென ரசிகர் ஒருவருக்கு பளாரென அறை கொடுத்தார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுக்காத போது அம்பயரை தரக் குறைவாக விமர்சித்ததோடு, ஸ்டம்புகளையும் கால்களால் உதைத்து தள்ளினார்.

தொடர்ந்து இதேபோல் மற்றொரு முறை நடக்க ஸ்டம்புகளை தூக்கி எறிந்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் கோபத்தை கட்டுப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும் என்றதோடு, ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதன்பின் ரசிகர் ஒருவரை பேட்டை வைத்து மிரட்டியது என்று அவரின் கோபம் எல்லை மீறி கொண்டே இருந்தது. தற்போது எம்பி-யாக வெற்றிபெற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரசிகரை அடித்துள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

Tags: Cricketbangaladesh cricket
ShareTweetSendShare
Previous Post

கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

Next Post

டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies