மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! - பியூஷ் கோயல்
Oct 26, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஏழைகளின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது! – பியூஷ் கோயல்

Web Desk by Web Desk
Jan 9, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனின் பங்களிப்பும் மிகவும் அவசியம்  என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இலவச இணைப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர்  பியூஷ்கோயல், முத்ரா திட்டம் மற்றும் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பியூஷ் கோயல்,

ஒவ்வொரு  மாநிலமும்,  முன்னேற்றம்  அடைந்து, 2047-ம் ஆண்டு வாக்கில்  நாட்டை  வளர்ச்சியடைந்த நாடாக  மாற்றவேண்டும் என்ற  இந்தியாவின்  பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்ப்புலவரும், தத்துவ ஞானியுமான திருவள்ளுவருக்கு மரியாதை  செலுத்திய திரு பியூஷ் கோயல், வள்ளுவரின் வழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பின்பற்றி  வருவதாகக் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும்,  எந்தவித முன்னேற்றத்தையும்  காணாத ஏழை, எளிய,  நலிவடைந்த மக்களின்  வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காகத்  திருவள்ளுவர் வழியில்  பிரதமர் பாடுபட்டு வருகிறார் என்று கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள்,  பெண்களின் வாழ்க்கை மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களால்  மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர்  நெருங்கிய தொடர்புகொள்ளும்  வகையில்,  அரசு பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். காசி தமிழ் சங்கமம்,  சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை பல்வேறு  மாநிலங்களின் மக்கள் மற்ற  மாநிலங்களின் வளமான  கலாச்சாரம் மற்றும்  பாரம்பரியம் பற்றி  பரஸ்பரம்  புரிந்துகொள்ள மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும் என்று கூறினார்.

தமிழ் நாட்டில்  வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை மிகப்பெரிய  வரவேற்பை பெற்றுள்ளது என்று  கூறியவர், இந்த யாத்திரை முகாம்களில் மக்கள்  தங்கள்  பெயர்களைப்  பதிவு செய்து, மத்திய அரசு  செயல்படுத்தி வரும் திட்டங்களின் பயன்களைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பட்டியலிட்டவர், பிரதமரின்  ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ்,  3.5 கோடி மக்கள்  பயனடைந்துள்ளதாகவும்,  ஜன் தன்  வங்கித்  திட்டத்தின் கீழ், 1.5 கோடி பேர்  வங்கி நடைமுறையில்  சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வீடுதோறும் குடிநீர்  திட்டத்தின்  கீழ், 1 கோடிக்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு  குழாய் இணைப்பு மூலம்  குடிநீர்  வழங்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்,  51 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும்,  உஜ்வாலா திட்டத்தின் கீழ்,  40 லட்சம்  பேர் பயனடைந்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பிரதமரின் வீட்டுவசதித்திட்டம் , முத்ரா கடன் திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம்,  மக்கள் மருந்தக மையங்கள் உள்ளிட்ட 17  திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைக்குப் பிரதமர்  உத்தரவாதம்  அளித்துள்ளார் என்று கூறிய அவர்,  தகுதியான மக்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களில் இணைந்து அவற்றின் பயன்களை வீட்டு வாசலிலேயே பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி ஸ்ரீதரன்,  சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகக் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: central government ministerpiyush goyal
ShareTweetSendShare
Previous Post

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

Next Post

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்!

Related News

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More

அண்மைச் செய்திகள்

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies