புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
Jul 5, 2025, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Web Desk by Web Desk
Jan 10, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலியான மற்றும் தவறான செய்திகள் முழு உலகிற்கும் மிகப்  பெரிய சவாலாகும் என்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில்  பட்டம் பெறும் மாணவர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.சி) 55-வது பட்டமளிப்பு விழா பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (10.01.2024) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் தில்லி, ஐஸ்வால், அமராவதி, கோட்டயம், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.எம்.சி நிறுவனத்தைச் சேர்ந்த  700-க்கும் அதிகமான மாணவர்கள் முதுகலைப் பட்டயம் பெற்றனர். இந்தி, ஆங்கிலம், ஒடியா, மராத்தி, மலையாளம் மற்றும் உருது இதழியல், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டயங்களை இந்த மாணவர்கள் பெற்றனர்.

மேலும், 65 மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,

பட்டம் பெற்ற மாணவர்களிடம், ஐ.ஐ.எம்.சி போன்ற நிறுவனங்களில் பட்டம் பெறும் எதிர்கால பத்திரிகையாளர்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றார். இன்று, யார் வேண்டுமானாலும், வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்ப முடிவதாகவும், இன்றைய டிஜிட்டல் வழிமுறைகளை அவர்கள்  பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் முழு உலகிற்கும் சவாலாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த சவால்களுக்கு மத்தியில் மக்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கப் போதுமான அளவு செயலாற்ற வேண்டும் என்று பத்திரிகை மற்றும் ஊடகத் துறைக்கு வரும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் என்று கூறினார்..

பத்திரிகைத்  துறையின் மதிப்புகளை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்றும், இந்த ஆற்றலை அவர்கள் திறன் வாய்ந்த முறையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.ஐ.எம்.சி. தலைவர் திரு ஜெகநாதன், தலைமை இயக்குநர் டாக்டர் அனுபமா பட்நாகர், கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் நிமிஷ் ரஸ்தகி, நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: ramnad govind
ShareTweetSendShare
Previous Post

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies