சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!
Mar 15, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது.

இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவரது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஒருபுறம் பொருந்தாக் கூட்டணி, இன்னொருபுறம் மகனுக்கு அமைச்சர் பதவி என்பதால், இந்த விவகாரம் கட்சிக்குள் புயலைக் கிளப்பியது. மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வந்தது.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022-ம் ஆண்டு கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இதையடுத்து, கட்சித் தாவல் சட்டப்படி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேசமயம், உத்தவ் தாக்கரே அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

இதனிடையே, தகுதி நீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

எனவே, இது குறித்து இறுதி முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று அறிவித்தார்.

அதன்படி, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டேயை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா” என்று தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த அதிரடியால் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

Tags: MaharastraUddhav ThackereyEknath Shindey
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Next Post

உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies