சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!
Jul 27, 2026, 01:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது.

இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவரது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஒருபுறம் பொருந்தாக் கூட்டணி, இன்னொருபுறம் மகனுக்கு அமைச்சர் பதவி என்பதால், இந்த விவகாரம் கட்சிக்குள் புயலைக் கிளப்பியது. மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வந்தது.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022-ம் ஆண்டு கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இதையடுத்து, கட்சித் தாவல் சட்டப்படி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேசமயம், உத்தவ் தாக்கரே அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

இதனிடையே, தகுதி நீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

எனவே, இது குறித்து இறுதி முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று அறிவித்தார்.

அதன்படி, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டேயை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா” என்று தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த அதிரடியால் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

Tags: MaharastraUddhav ThackereyEknath Shindey
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Next Post

உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies