கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே கரூர்-நாமக்கல் புறவழிச்சாலை ராம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களா கட்டி வருகிறார்.
அந்த வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் பங்களா கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.