2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! - நிர்மலா சீதாராமன்
Jul 5, 2025, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Jan 11, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு கிஃப்ட் சிட்டி நுழைவாயிலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட் சிட்டி) இந்தியாவின் நிதி மற்றும் முதலீட்டு மையத்திற்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது என்று மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காந்திநகரில் இன்று (11.01.2024) 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிஃப்ட் சிட்டி-நவீன இந்தியாவின் விருப்பம் ‘ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2007-ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிஃப்ட் சிட்டி என்ற எண்ணத்தை உருவாக்கினார் என்றும், இப்போது அது ஒரு பெரிய சர்வதேச நிதி மையமாக விரிவடைந்துள்ளது என்று கூறினார்.

பசுமை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டி பசுமை கடன்களுக்கான தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சர்வதேச நிதிச் சேவை மையங்களில் வளர்ந்து வரும் செயல்பாடுகளை பட்டியலிட்ட திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டியில் இப்போது 9 வெளிநாட்டு வங்கிகள், 25 வங்கிகள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில்முறை சேவை வழங்குநர்கள், 40 நிதிநுட்ப  நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், நிதி சூழலின் ஒருங்கிணைப்பாக கிஃப்ட் சிட்டியை விவரித்த மத்திய நிதியமைச்சர், தொழில்நுட்பத்தின் நன்மைகளை நிதிச் சேவைகளில் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், உலகளாவிய நிதியை அணுகுவதில் இந்தியாவின் தொழில்முனைவோருக்கு நன்மைகளை வழங்க கிஃப்ட் சிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பெரும்பாலான உலகளாவிய நிதி மையங்கள் முன்பு மூலதனத்தை மட்டுமே பார்த்தன, ஆனால் கிஃப்ட் சிட்டி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட நிதி சேவைகளைப் பெற்ற பெருமைக்குரியது என்று கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Next Post

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies