2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! - நிர்மலா சீதாராமன்
Jun 13, 2026, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-க்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு கிஃப்ட் சிட்டி நுழைவாயிலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட் சிட்டி) இந்தியாவின் நிதி மற்றும் முதலீட்டு மையத்திற்கான நுழைவாயிலாகத் திகழ்கிறது என்று மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காந்திநகரில் இன்று (11.01.2024) 10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிஃப்ட் சிட்டி-நவீன இந்தியாவின் விருப்பம் ‘ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2007-ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிஃப்ட் சிட்டி என்ற எண்ணத்தை உருவாக்கினார் என்றும், இப்போது அது ஒரு பெரிய சர்வதேச நிதி மையமாக விரிவடைந்துள்ளது என்று கூறினார்.

பசுமை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை விளக்கிய திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டி பசுமை கடன்களுக்கான தளமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சர்வதேச நிதிச் சேவை மையங்களில் வளர்ந்து வரும் செயல்பாடுகளை பட்டியலிட்ட திருமதி சீதாராமன், கிஃப்ட் சிட்டியில் இப்போது 9 வெளிநாட்டு வங்கிகள், 25 வங்கிகள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில்முறை சேவை வழங்குநர்கள், 40 நிதிநுட்ப  நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம், நிதி சூழலின் ஒருங்கிணைப்பாக கிஃப்ட் சிட்டியை விவரித்த மத்திய நிதியமைச்சர், தொழில்நுட்பத்தின் நன்மைகளை நிதிச் சேவைகளில் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், உலகளாவிய நிதியை அணுகுவதில் இந்தியாவின் தொழில்முனைவோருக்கு நன்மைகளை வழங்க கிஃப்ட் சிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பெரும்பாலான உலகளாவிய நிதி மையங்கள் முன்பு மூலதனத்தை மட்டுமே பார்த்தன, ஆனால் கிஃப்ட் சிட்டி தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட நிதி சேவைகளைப் பெற்ற பெருமைக்குரியது என்று கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Next Post

காஷ்மீரில் அமைதி : மறைமுக யுத்தத்தில் எதிரிகள்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies