நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!
Oct 26, 2025, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாயில் அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இப்பாலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.

எனினும், இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்பாலம், மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது. இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதையொட்டி, இன்று காலை மகாராஷ்டிராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாசிக்கில் பிரம்மாண்ட ரோடு ஷோவையும் நடத்தினார்.

 

#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Nashik, Maharashtra. pic.twitter.com/WnZi6hPT2B

— ANI (@ANI) January 12, 2024

Tags: PM ModiMaharastraMumbai BridgeIngaurates
ShareTweetSendShare
Previous Post

என் மண் என் மக்கள் நடைபயணத்தில் வாழ்க்கையின் பல அற்புதப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்! – அண்ணாமலை

Next Post

காரில் வலம் வரும் அயோத்தி ராமர் கோவில்!

Related News

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies