நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!
May 2, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாயில் அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இப்பாலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.

எனினும், இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்பாலம், மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது. இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதையொட்டி, இன்று காலை மகாராஷ்டிராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாசிக்கில் பிரம்மாண்ட ரோடு ஷோவையும் நடத்தினார்.

 

#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Nashik, Maharashtra. pic.twitter.com/WnZi6hPT2B

— ANI (@ANI) January 12, 2024

Tags: PM ModiMaharastraMumbai BridgeIngaurates
ShareTweetSendShare
Previous Post

என் மண் என் மக்கள் நடைபயணத்தில் வாழ்க்கையின் பல அற்புதப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறோம்! – அண்ணாமலை

Next Post

காரில் வலம் வரும் அயோத்தி ராமர் கோவில்!

Related News

அனைவரும் ஒன்று என்ற உணர்வுடன் வளர வேண்டும்; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பேச்சு

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

குன்றக்குடி அடிகளார் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies