திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
Jul 25, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் அமைச்சராக இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜித் போஸ். இவர், மேற்கு வங்க மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்ததில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, நகராட்சி அமைப்புகளில் முறைகேடாக வேலை வழங்கியது குறித்து விசாரணை நடத்தும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதன் பிறகு, இதுகுறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ரதின் கோஷுக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த நிலையில், அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் இம்மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தபாஸ் ராய், முன்னாள் நகராட்சித் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6.40 மணியில் இருந்து இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் லேக் டவுன் பகுதியில் உள்ள சுஜித் போஸின் 2 வீடுகள், பி.பி.கங்குலி தெருவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபஸ் ராயின் வீடு மற்றும் சுபோத் சக்ரவர்த்தியின் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகின்றன.

மேலும், சோதனை நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது ஆதரவாளர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: MLARaidTrinamool CongressHousesEnforcement DirectorateMinisterwest bengal
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

Next Post

இளைஞர்களை ஊக்குவிக்கும் சுவாமி விவேகானந்தர் கருத்துகள்: பிரதமர் மோடி!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies