மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் - நாராயணன் திருப்பதி கண்டனம்
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் மருத்துவர்கள் பொது மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாரணயன் திருப்பதி அறிக்கையில், மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். மருத்துவம் தொழில் அல்ல, புனிதமான சேவை என்பதால் தான் அரசு பல்வேறு சலுகைகளை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.

மொஹரம் என்ற பெண் நோயாளி வயிற்று வலியின் பொருட்டு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அப் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக மேல் சட்டை (Coat) அணிவது வழக்கம். இந்த வழக்கம் மருத்துவர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கவும் செய்யும்.

ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மேல் சட்டை அணியாமல், வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக பேசியுள்ளது மருத்துவ சேவையை அவமதிப்பாக உள்ளது.

பொது மக்களின் அறியாமையால் பல மருத்துவமனைகளை, மருத்துவர்களை வசை பாடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும், அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு சகிப்பு தன்மையோடு மருத்துவர்கள் சூழ்நிலையினை கையாள்வது அவர்களின் மேன்மை மற்றும் பண்பு.

ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காக அரசு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், அம்மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல். மருத்துவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களை, குழந்தைகளை கூட அன்போடு, பண்போடு “வாங்க, சொல்லுங்க” என்று அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னை விட வயதில் பெரியவரை “நீ, வா, போ” என்ற அலட்சிய வார்த்தைகள் மருத்துவர் என்கிற மரியாதையை இழக்க செய்யும்.

தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அந்த மருத்துவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டியதே.

மூத்த அரசு மருத்துவர்கள் அந்த இளம் மருத்துவருக்கு அறிவுரை வழங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அவசியத்தை உரைத்து எதிர் வரும் காலங்களில் அவரை மாற்றியமைத்துக் கொள்ள உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: dmk failsnarayan tirupati bjp
ShareTweetSendShare
Previous Post

தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Next Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies