மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் - நாராயணன் திருப்பதி கண்டனம்
Jul 26, 2025, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Web Desk by Web Desk
Jan 13, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் மருத்துவர்கள் பொது மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாரணயன் திருப்பதி அறிக்கையில், மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். மருத்துவம் தொழில் அல்ல, புனிதமான சேவை என்பதால் தான் அரசு பல்வேறு சலுகைகளை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.

மொஹரம் என்ற பெண் நோயாளி வயிற்று வலியின் பொருட்டு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அப் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக மேல் சட்டை (Coat) அணிவது வழக்கம். இந்த வழக்கம் மருத்துவர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கவும் செய்யும்.

ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மேல் சட்டை அணியாமல், வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக பேசியுள்ளது மருத்துவ சேவையை அவமதிப்பாக உள்ளது.

பொது மக்களின் அறியாமையால் பல மருத்துவமனைகளை, மருத்துவர்களை வசை பாடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனாலும், அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு சகிப்பு தன்மையோடு மருத்துவர்கள் சூழ்நிலையினை கையாள்வது அவர்களின் மேன்மை மற்றும் பண்பு.

ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காக அரசு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், அம்மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல். மருத்துவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களை, குழந்தைகளை கூட அன்போடு, பண்போடு “வாங்க, சொல்லுங்க” என்று அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தன்னை விட வயதில் பெரியவரை “நீ, வா, போ” என்ற அலட்சிய வார்த்தைகள் மருத்துவர் என்கிற மரியாதையை இழக்க செய்யும்.

தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அந்த மருத்துவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டியதே.

மூத்த அரசு மருத்துவர்கள் அந்த இளம் மருத்துவருக்கு அறிவுரை வழங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அவசியத்தை உரைத்து எதிர் வரும் காலங்களில் அவரை மாற்றியமைத்துக் கொள்ள உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: dmk failsnarayan tirupati bjp
ShareTweetSendShare
Previous Post

தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Next Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies