சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!
Oct 25, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள் மகர சங்கராந்தி விழாவுக்காக மேற்குவங்கத்தின் கங்காசாகருக்குச் சென்றனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழி கேட்டிருக்கிறார்கள்.

இதனால் பயந்துபோன அச்சிறுமிகள், சத்தம் போட்டுக் கொண்டே அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி இருக்கிறார்கள். இதைக்கண்ட புருலியா மக்கள், குழந்தைத் திருடர்கள் என்று கூறி சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலரும் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், “இந்து துறவிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கொடிய தாக்குதல் நடத்தியதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற்குவங்கத்தின் ஒவ்வொரு மூலையிலும் காளி அன்னை வசிக்கிறாள். வங்காள நிலம் சுவாமி விவேகானந்தர் தொடங்கி பல ஆன்மீக குருக்களால் தாக்கம் பெற்றுள்ளது. ஒரு சில முஸ்லீம் வாக்குகளுக்காக அதே வங்காளத்தில் மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு எதிரான சூழலை உருவாக்கிய விதம் மிகவும் வருந்தத்தக்கது.

காளி மாதாவின் பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றன. இந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தொழிலாளர்களை உயிரோடு எரிக்கிறார்கள். இக்கொடுமையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பா.ஜ.க. ஐ.டி. குழுத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற தீவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேசமயம், சாதுக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன? விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதுதான் மேற்குவங்கத்தின் அதிர்ச்சியான நிலை” என்று கூறினார்.

Tags: sadhusBy goonsbjpVHPwest bengalcondemnattacked
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிள் நிறுவனத்தை முந்திய மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Next Post

சென்னையில் களை கட்டும் பொங்கல் பானை விற்பனை!

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies