சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!
Apr 29, 2026, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதுக்கள் மீது தாக்குதல்: மம்தா மன்னிப்புக் கேட்க வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள் மகர சங்கராந்தி விழாவுக்காக மேற்குவங்கத்தின் கங்காசாகருக்குச் சென்றனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழி கேட்டிருக்கிறார்கள்.

இதனால் பயந்துபோன அச்சிறுமிகள், சத்தம் போட்டுக் கொண்டே அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி இருக்கிறார்கள். இதைக்கண்ட புருலியா மக்கள், குழந்தைத் திருடர்கள் என்று கூறி சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலரும் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், “இந்து துறவிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கொடிய தாக்குதல் நடத்தியதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேற்குவங்கத்தின் ஒவ்வொரு மூலையிலும் காளி அன்னை வசிக்கிறாள். வங்காள நிலம் சுவாமி விவேகானந்தர் தொடங்கி பல ஆன்மீக குருக்களால் தாக்கம் பெற்றுள்ளது. ஒரு சில முஸ்லீம் வாக்குகளுக்காக அதே வங்காளத்தில் மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு எதிரான சூழலை உருவாக்கிய விதம் மிகவும் வருந்தத்தக்கது.

காளி மாதாவின் பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றன. இந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தொழிலாளர்களை உயிரோடு எரிக்கிறார்கள். இக்கொடுமையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பா.ஜ.க. ஐ.டி. குழுத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற தீவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேசமயம், சாதுக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன? விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதுதான் மேற்குவங்கத்தின் அதிர்ச்சியான நிலை” என்று கூறினார்.

Tags: sadhusBy goonsbjpVHPwest bengalcondemnattacked
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிள் நிறுவனத்தை முந்திய மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Next Post

சென்னையில் களை கட்டும் பொங்கல் பானை விற்பனை!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies