ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Oct 25, 2025, 08:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதையடுத்து, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை செங்கடலில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வந்தது.

மேலும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல, ஐ.நா. மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தினர்.

எனினும், இந்த எச்சரிக்கையை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணிக்கவே, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இந்த நிலையில்தான், செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். காரணம், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.

ஈரான் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், நாளை செங்கடலின் நிலைமை குறித்தும், இருதரப்பு நட்புறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags: Jaishankarexternal affairs ministerIran
ShareTweetSendShare
Previous Post

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

Next Post

ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies