ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Mar 15, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதையடுத்து, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை செங்கடலில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வந்தது.

மேலும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல, ஐ.நா. மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தினர்.

எனினும், இந்த எச்சரிக்கையை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணிக்கவே, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இந்த நிலையில்தான், செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். காரணம், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.

ஈரான் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், நாளை செங்கடலின் நிலைமை குறித்தும், இருதரப்பு நட்புறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags: Jaishankarexternal affairs ministerIran
ShareTweetSendShare
Previous Post

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

Next Post

ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies