ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Sep 12, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 11:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதையடுத்து, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை செங்கடலில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வந்தது.

மேலும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல, ஐ.நா. மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தினர்.

எனினும், இந்த எச்சரிக்கையை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணிக்கவே, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இந்த நிலையில்தான், செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். காரணம், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.

ஈரான் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், நாளை செங்கடலின் நிலைமை குறித்தும், இருதரப்பு நட்புறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags: Jaishankarexternal affairs ministerIran
Share
Tweet
SendShare
Previous Post

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

Next Post

ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies