ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
Jul 28, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதையடுத்து, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

அதேசமயம், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை செங்கடலில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வந்தது.

மேலும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல, ஐ.நா. மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தினர்.

எனினும், இந்த எச்சரிக்கையை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணிக்கவே, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

இந்த நிலையில்தான், செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். காரணம், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.

ஈரான் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், நாளை செங்கடலின் நிலைமை குறித்தும், இருதரப்பு நட்புறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags: Jaishankarexternal affairs ministerIran
ShareTweetSendShare
Previous Post

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

Next Post

ஆசியக் கோப்பை கால்பந்து : ஆஸ்திரேலியா வெற்றி!

Related News

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies