அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!

Web Desk by Web Desk
Jan 15, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரைச் சேர்ந்த அஜூ ஜோசப் – ஷெபா ஆன் தம்பதியின் மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் (ஏ.ஐ) தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றை ரவுல் ஜான் தயாரித்திருக்கிறார்.

தனது வகுப்புத் தோழன் சையத் உதவியுடன், பல்வேறு மரங்களை பயன்படுத்தி, அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோ ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன் பிறகு மாணவர் ரவுல்ஜான் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ரோபோ நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கிறது என்பதுதான். அதாவது, நாம் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டால் அதே தொணியில் பதிலளிக்கிறது.

அதேபோல, நாம் சாந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக கேள்வி கேட்டால் அந்த ரோபோவும் பணிவான தொணியில் பதில் அளிக்கிறது. ரவுல் ஜானின் இந்தப் படைப்பு, அவர் தொடங்கிய யூ டியூப் சேனல் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் படிப்புத் தளங்கள் கலந்துரையாடலின்போது ரவுல் ஜானின் திறமையை அங்கீகரித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க மாணவர்கள் பலரும் கூகுள் மீட் மூலம் மாணவர் ரவுல் ஜானை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

இதன் மூலம் அமெரிக்க மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர்.

பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் ரவுல் ஜானிடம் யோசனை கேட்கிறார்கள். இரவு நேரத்தில் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

அப்போது அவர் தூங்கி விட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்திருக்கும் ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

Tags: AmeericanKeralastudentsstudentTeaching
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் வீர விளையாட்டுகள்!

Next Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies