அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க மாணவர்களுக்கு பாடம் நடத்தும் கேரள அரசுப் பள்ளி மாணவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 15, 2024, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரைச் சேர்ந்த அஜூ ஜோசப் – ஷெபா ஆன் தம்பதியின் மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் (ஏ.ஐ) தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றை ரவுல் ஜான் தயாரித்திருக்கிறார்.

தனது வகுப்புத் தோழன் சையத் உதவியுடன், பல்வேறு மரங்களை பயன்படுத்தி, அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோ ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன் பிறகு மாணவர் ரவுல்ஜான் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ரோபோ நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கிறது என்பதுதான். அதாவது, நாம் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டால் அதே தொணியில் பதிலளிக்கிறது.

அதேபோல, நாம் சாந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக கேள்வி கேட்டால் அந்த ரோபோவும் பணிவான தொணியில் பதில் அளிக்கிறது. ரவுல் ஜானின் இந்தப் படைப்பு, அவர் தொடங்கிய யூ டியூப் சேனல் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் படிப்புத் தளங்கள் கலந்துரையாடலின்போது ரவுல் ஜானின் திறமையை அங்கீகரித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க மாணவர்கள் பலரும் கூகுள் மீட் மூலம் மாணவர் ரவுல் ஜானை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.

இதன் மூலம் அமெரிக்க மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர்.

பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் ரவுல் ஜானிடம் யோசனை கேட்கிறார்கள். இரவு நேரத்தில் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

அப்போது அவர் தூங்கி விட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்திருக்கும் ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.

Tags: AmeericanKeralastudentsstudentTeaching
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் வீர விளையாட்டுகள்!

Next Post

அயோத்தி கலசம் காஷ்மீர் கோவிலில் பிரதிஷ்டை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies