பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!
Jan 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது எபிசோடுக்கு 22.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“பரிக்ஷா பே சர்ச்சா” என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை குறித்து விவாதிக்கும் ஒரு திட்டமாகும்.

இந்நிகழ்ச்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சி இதுவரை 6 முறை நடந்திருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பிரதமரின் கருத்துகளை கேட்டறிந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2023 டிசம்பர் 11-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை MyGov போர்ட்டலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர்களில் 2,050 பேர் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு பிரதமர் மோடியின் கையெழுத்திடப்பட்ட, இந்தி மற்றும் ஆங்கிலத்திலான தேர்வு வாரியர்ஸ் புத்தகம் அடங்கிய சிறப்பு “பரிக்ஷா பே சர்ச்சா கிட்” மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது தவிர, இந்த ஆண்டு தனித்துவமான ஊடாடும் திட்டத்தின் மூலம் 4,000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் உரையாடுவார்கள் என்றும், டெல்லி பாரத் மண்டபத்தில் டவுன்ஹால் வடிவத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சிக்கு 22.6 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiPariksha Pe Charcha7th EditionJanuary 29th
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Next Post

பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் தவணை!

Related News

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies