பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!
Jul 29, 2026, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது எபிசோடுக்கு 22.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“பரிக்ஷா பே சர்ச்சா” என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை குறித்து விவாதிக்கும் ஒரு திட்டமாகும்.

இந்நிகழ்ச்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சி இதுவரை 6 முறை நடந்திருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பிரதமரின் கருத்துகளை கேட்டறிந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2023 டிசம்பர் 11-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை MyGov போர்ட்டலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர்களில் 2,050 பேர் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு பிரதமர் மோடியின் கையெழுத்திடப்பட்ட, இந்தி மற்றும் ஆங்கிலத்திலான தேர்வு வாரியர்ஸ் புத்தகம் அடங்கிய சிறப்பு “பரிக்ஷா பே சர்ச்சா கிட்” மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது தவிர, இந்த ஆண்டு தனித்துவமான ஊடாடும் திட்டத்தின் மூலம் 4,000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் உரையாடுவார்கள் என்றும், டெல்லி பாரத் மண்டபத்தில் டவுன்ஹால் வடிவத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சிக்கு 22.6 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiPariksha Pe Charcha7th EditionJanuary 29th
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Next Post

பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் தவணை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies