பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!
Apr 29, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி: 22.6 லட்சம் பேர் பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது எபிசோடுக்கு 22.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“பரிக்ஷா பே சர்ச்சா” என்பது இளைஞர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி, தேர்வுகள் மற்றும் பள்ளிக்குப் பிறகான வாழ்க்கை குறித்து விவாதிக்கும் ஒரு திட்டமாகும்.

இந்நிகழ்ச்சியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சி இதுவரை 6 முறை நடந்திருக்கிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பிரதமரின் கருத்துகளை கேட்டறிந்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2023 டிசம்பர் 11-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை MyGov போர்ட்டலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இவர்களில் 2,050 பேர் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு பிரதமர் மோடியின் கையெழுத்திடப்பட்ட, இந்தி மற்றும் ஆங்கிலத்திலான தேர்வு வாரியர்ஸ் புத்தகம் அடங்கிய சிறப்பு “பரிக்ஷா பே சர்ச்சா கிட்” மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இது தவிர, இந்த ஆண்டு தனித்துவமான ஊடாடும் திட்டத்தின் மூலம் 4,000 பங்கேற்பாளர்கள் பிரதமருடன் உரையாடுவார்கள் என்றும், டெல்லி பாரத் மண்டபத்தில் டவுன்ஹால் வடிவத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 7-வது பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சிக்கு 22.6 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது இதுவரை இல்லாத எண்ணிக்கையாகும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiPariksha Pe Charcha7th EditionJanuary 29th
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Next Post

பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு நாளை முதல் தவணை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies