கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!
Oct 6, 2025, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நிலக்கரி தொழிலதிபர் முகமது ஏசர் அன்சாரி. இவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட நிலக்கரியை, வெளிச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இம்முறைகேடு தொடர்பாக ஏசர் அன்சாரியிடம் டிரக் டிரைவராகப் பணிபுரியும் சையத் சல்மானி உள்ளிட்டோர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையையும் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் 19 டன் எடையுள்ள நிலக்கரியை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், அந்த டிரக்குகளை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனடிப்படையில், நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், மானிய விலை நிலக்கரியை விநியோகம் செய்ததாக ஏசர் அன்சாரி குறிப்பிட்டிருந்த 13 நிறுவனங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும், மேற்கண்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்றவகையில், ஏசர் அன்சாரி 71 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பண மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் ஏசர் அன்சாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் ஏசர் அன்சாரி அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி ஏசர் அன்சாரிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, மறுநாள் ஏசர் அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: ArrestEnforcement DirectorateJharkhandBussiness Man
ShareTweetSendShare
Previous Post

ஹனுமான் படத்தின் நடிகரை பாராட்டினார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

Next Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies