கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!
Mar 15, 2026, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நிலக்கரி தொழிலதிபர் முகமது ஏசர் அன்சாரி. இவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட நிலக்கரியை, வெளிச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இம்முறைகேடு தொடர்பாக ஏசர் அன்சாரியிடம் டிரக் டிரைவராகப் பணிபுரியும் சையத் சல்மானி உள்ளிட்டோர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையையும் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் 19 டன் எடையுள்ள நிலக்கரியை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், அந்த டிரக்குகளை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனடிப்படையில், நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், மானிய விலை நிலக்கரியை விநியோகம் செய்ததாக ஏசர் அன்சாரி குறிப்பிட்டிருந்த 13 நிறுவனங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும், மேற்கண்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்றவகையில், ஏசர் அன்சாரி 71 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பண மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் ஏசர் அன்சாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் ஏசர் அன்சாரி அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி ஏசர் அன்சாரிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, மறுநாள் ஏசர் அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: ArrestEnforcement DirectorateJharkhandBussiness Man
ShareTweetSendShare
Previous Post

ஹனுமான் படத்தின் நடிகரை பாராட்டினார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

Next Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies