கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!
Sep 13, 2026, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நிலக்கரி தொழிலதிபர் முகமது ஏசர் அன்சாரி. இவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட நிலக்கரியை, வெளிச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இம்முறைகேடு தொடர்பாக ஏசர் அன்சாரியிடம் டிரக் டிரைவராகப் பணிபுரியும் சையத் சல்மானி உள்ளிட்டோர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையையும் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் 19 டன் எடையுள்ள நிலக்கரியை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், அந்த டிரக்குகளை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனடிப்படையில், நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், மானிய விலை நிலக்கரியை விநியோகம் செய்ததாக ஏசர் அன்சாரி குறிப்பிட்டிருந்த 13 நிறுவனங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும், மேற்கண்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்றவகையில், ஏசர் அன்சாரி 71 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பண மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் ஏசர் அன்சாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் ஏசர் அன்சாரி அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி ஏசர் அன்சாரிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, மறுநாள் ஏசர் அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: ArrestEnforcement DirectorateJharkhandBussiness Man
Share
Tweet
SendShare
Previous Post

ஹனுமான் படத்தின் நடிகரை பாராட்டினார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

Next Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies