4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!
Oct 6, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இவ்வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

3 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஆகவே, 4-வது முறையாக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்னுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை எனக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்? நான் பிரச்சாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்திருக்கிறார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து கவுரவ் பாட்டியா கூறுகையில், “அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்? அவர் அச்சமடைந்திருக்கிறார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து கெஜ்ரிவாலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.வில் அராஜக குணம் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Enforcement DirectorateArvind Kejriwaldelhi cmsummonedBJP attack
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies