4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இவ்வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

3 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஆகவே, 4-வது முறையாக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்னுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை எனக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்? நான் பிரச்சாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்திருக்கிறார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து கவுரவ் பாட்டியா கூறுகையில், “அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்? அவர் அச்சமடைந்திருக்கிறார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து கெஜ்ரிவாலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.வில் அராஜக குணம் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Enforcement DirectorateArvind Kejriwaldelhi cmsummonedBJP attack
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies