4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!
Aug 20, 2025, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இவ்வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

3 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஆகவே, 4-வது முறையாக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்னுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை எனக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்? நான் பிரச்சாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்திருக்கிறார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து கவுரவ் பாட்டியா கூறுகையில், “அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்? அவர் அச்சமடைந்திருக்கிறார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து கெஜ்ரிவாலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.வில் அராஜக குணம் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Enforcement DirectorateArvind Kejriwaldelhi cmsummonedBJP attack
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies