நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நடத்திய உரையாடலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜம்முவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே சென்று வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருக்கிறார். ஒரு காலத்தில் சிறிய சலுகைகள் மற்றும் வேலைக்காகக் கூட, ஏழைக் குடிமகன் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், பிரதமர் மோடி தற்போது அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார். அனைத்து பயனாளிகளுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு பொறுப்புக் கூறப்பட்டதால், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனின் வீட்டு வாசலுக்கும் வருகிறார்கள்” என்று கூறினார்.