மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே விக்ரோலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐசியு அருகே ஏற்பட்ட தீ விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்தவர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த சிவாஜி தேலே (65), விமல் திவாரி (60), யசோதாபாய் ரத்தோட் (58), காந்தபிரசாத் நிர்மல் (75), அருண் ஹரிபகத் (64) மற்றும் சுஷ்மிதா கோக்ஷே (23) ஆகியோரை பத்திரமாக மீட்டு வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சோதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.