சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் நக்சல்கள் நடமாடும் இருக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, தேர்தல் நடைபெறும்போது, நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

பொதுமக்களை வாக்களிக்க விடாமல் வாக்குச்சாவடிகளை குறிவைத்துத் தாக்குவது, தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும்போது தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 அல்லது 3 கட்டமாகத் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல் கூட 2 கட்டமாகவே நடந்தது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகரமான ராய்ப்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெலம் குட்டா மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டி.ஆர்.ஜி.) மற்றும் சி.ஆர்.பி.எஃப்.பின் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் 2 பெண் நக்சல்கள் உட்பட 3 நக்சல்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள், மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

உயிரிழந்த நக்சல்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: encounterChhattisgarh3 Naxals killed
ShareTweetSendShare
Previous Post

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

Next Post

கட்டுப்பாடுகளை விதிக்க தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோபாலபுரம் குடும்பத்தினரின் சொத்து அல்ல! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies