சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் நக்சல்கள் நடமாடும் இருக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, தேர்தல் நடைபெறும்போது, நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

பொதுமக்களை வாக்களிக்க விடாமல் வாக்குச்சாவடிகளை குறிவைத்துத் தாக்குவது, தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும்போது தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 அல்லது 3 கட்டமாகத் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல் கூட 2 கட்டமாகவே நடந்தது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகரமான ராய்ப்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெலம் குட்டா மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டி.ஆர்.ஜி.) மற்றும் சி.ஆர்.பி.எஃப்.பின் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் 2 பெண் நக்சல்கள் உட்பட 3 நக்சல்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள், மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

உயிரிழந்த நக்சல்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: encounterChhattisgarh3 Naxals killed
Share
Tweet
SendShare
Previous Post

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

Next Post

கட்டுப்பாடுகளை விதிக்க தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோபாலபுரம் குடும்பத்தினரின் சொத்து அல்ல! – அண்ணாமலை

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies