பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோயிலில் அலைக்கழிக்கப்படும் பக்தர்கள்!

செல்போன், சுமைகளை வைக்க இடம் தேடி அலைவதாக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்போன், சுமைகள் உள்ளிட்ட  பொருள்களை ஒப்படைக்க அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருகை தருவார்கள்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ந் தேதி தெப்பத்தேர்  நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து செல்கின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கால் நடையாக சென்று முருகனை தரிசிப்பார்கள்.

இதனிடையே பழனி மலைக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் செல்போனை ஒப்படைத்து செல்கின்றனர். அதற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செல்போனை ஒப்படைக்கவும், திரும்ப பெறவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேபோல், பக்தர்கள் சுமைகளை வேறு ஒரு இடத்திலும், காலணிகளை மற்றொரு இடத்திலும் ஒப்படைத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது ஒருவர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பொருள்களை ஒப்டைக்க வேண்டி இருப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் ஒப்படைத்த பொருள்களை திரும்பப் பெற மீண்டும் 3 இடங்களுக்கு அலைய வேண்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முருகனை தரிசிப்பதற்கு ரூ.200, ரூ.100 உள்ளிட்ட தரிசன டிக்கெட் பெற்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காத்திருக்கும் இடங்களில் முறையான பேன் வசதி செய்யப்படவில்லை என்றும், சில இடங்களில் பேன் இருந்தும் செயல்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டண தரிசன டிக்கெட் பெற்று காத்திருக்கும் நேரத்தில் அவசரத்திற்குக் கூட வெளியே செல்ல முடியவில்லை என்றும், இதனால் வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: DevoteesluggageThaipusa festivalpalani malaiPalaniPalani Murugan templecellphone
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: பக்தர்களுக்காக 1,100 சதுர அடியில் மிதக்கும் எல்.இ.டி. திரை!

Next Post

சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 பேர் சுட்டுக்கொலை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies