1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!
Oct 23, 2025, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள்  எங்களை மறக்க மாட்டார்கள்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ராமர் கோவில் திறப்பை தேசமே தீபாவளி போல் கொண்டாடுகிறது. காலசக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கூடாரத்தில் இருந்த ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு நன்றி. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமன் அரிச்சல்முனை சென்ற போது காலசக்கரம் மாறியது. நானும் அங்கு சென்ற போது அதனை உணர்ந்தேன்.இன்று ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக இந்த பணியை செய்ய முடியாமல் போனதற்கு, நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்

ராமர் கோவில் தொடர்பான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது.  நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு நன்றி. யாரையும் வீழ்த்தி இந்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், பிரிவினை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த காலத்தில், அயோத்தி மற்றும் நாட்டு மக்கள் பல நூறு ஆண்டுகால பிரிவினையை அனுபவித்து வருகின்றனர். நமது தலைமுறையினர் பலர் இந்த பிரிவினையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பிரபு ராமரின் பக்தர்கள் முழுமையாக  உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள்.இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றையும் விட புனிதமானது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை  மறக்க மாட்டார்கள்.  ராமர் புகழ் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். ராமர் என்பது யாரையும எரிக்கும் ஆற்றல் கிடையாது. சக்தியை தரும் ஆற்றல். அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டுமல்ல இந்திய கலாச்சாரமும் நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Ramar TempleAyothiayodhya ramar temple functionin ayodhyaPMModimodi speech
ShareTweetSendShare
Previous Post

சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் புதிதாக 5 கேலரிகள் திறப்பு!

Next Post

இந்தியாவில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies