1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள்  எங்களை மறக்க மாட்டார்கள்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ராமர் கோவில் திறப்பை தேசமே தீபாவளி போல் கொண்டாடுகிறது. காலசக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கூடாரத்தில் இருந்த ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு நன்றி. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமன் அரிச்சல்முனை சென்ற போது காலசக்கரம் மாறியது. நானும் அங்கு சென்ற போது அதனை உணர்ந்தேன்.இன்று ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக இந்த பணியை செய்ய முடியாமல் போனதற்கு, நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்

ராமர் கோவில் தொடர்பான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது.  நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு நன்றி. யாரையும் வீழ்த்தி இந்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், பிரிவினை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த காலத்தில், அயோத்தி மற்றும் நாட்டு மக்கள் பல நூறு ஆண்டுகால பிரிவினையை அனுபவித்து வருகின்றனர். நமது தலைமுறையினர் பலர் இந்த பிரிவினையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பிரபு ராமரின் பக்தர்கள் முழுமையாக  உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள்.இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றையும் விட புனிதமானது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை  மறக்க மாட்டார்கள்.  ராமர் புகழ் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். ராமர் என்பது யாரையும எரிக்கும் ஆற்றல் கிடையாது. சக்தியை தரும் ஆற்றல். அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டுமல்ல இந்திய கலாச்சாரமும் நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Ramar TempleAyothiayodhya ramar temple functionin ayodhyaPMModimodi speech
Share
Tweet
SendShare
Previous Post

சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் புதிதாக 5 கேலரிகள் திறப்பு!

Next Post

இந்தியாவில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies