1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!
Apr 29, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள்  எங்களை மறக்க மாட்டார்கள்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ராமர் கோவில் திறப்பை தேசமே தீபாவளி போல் கொண்டாடுகிறது. காலசக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கூடாரத்தில் இருந்த ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு நன்றி. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமன் அரிச்சல்முனை சென்ற போது காலசக்கரம் மாறியது. நானும் அங்கு சென்ற போது அதனை உணர்ந்தேன்.இன்று ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக இந்த பணியை செய்ய முடியாமல் போனதற்கு, நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்

ராமர் கோவில் தொடர்பான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது.  நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு நன்றி. யாரையும் வீழ்த்தி இந்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், பிரிவினை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த காலத்தில், அயோத்தி மற்றும் நாட்டு மக்கள் பல நூறு ஆண்டுகால பிரிவினையை அனுபவித்து வருகின்றனர். நமது தலைமுறையினர் பலர் இந்த பிரிவினையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பிரபு ராமரின் பக்தர்கள் முழுமையாக  உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள்.இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றையும் விட புனிதமானது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை  மறக்க மாட்டார்கள்.  ராமர் புகழ் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். ராமர் என்பது யாரையும எரிக்கும் ஆற்றல் கிடையாது. சக்தியை தரும் ஆற்றல். அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டுமல்ல இந்திய கலாச்சாரமும் நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Ramar TempleAyothiayodhya ramar temple functionin ayodhyaPMModimodi speech
ShareTweetSendShare
Previous Post

சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் புதிதாக 5 கேலரிகள் திறப்பு!

Next Post

இந்தியாவில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies