குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியா்கள் தலைமையில் 30 மாணவர்கள் வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு கடந்த 18-ம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு, 34 பேரும் ஒரே படகில் பயணம் செய்து ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஏரியில் விழுந்து தத்தளித்தனர். இவர்களது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 18 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதி 12 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக குஜராத் காவல் துறையினர் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இந்த சூழலில், மேற்கண்ட விபத்து தொடர்பான விவகாரத்தை குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, “படகில் பயணித்த குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மிதவை ஆடைகள் கூட வழங்கப்படவில்லை. சிறிதும் பொறுப்பற்று இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, ஜனவரி 29-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அதற்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: high courtGujratBoat accidentAsked action report
ShareTweetSendShare
Previous Post

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Next Post

இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies