ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பராக்கிரம் திவாஸ் (பராக்கிரம தினம்) கொண்டாட்டம் நடைபெற்றது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி ஒரு முன்மாதிரி. இன்று, நாட்டின் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் இந்தியத் தன்மையில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது.

நம் நாட்டை வளர்ச்சியடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எண்ணினார். ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதை நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால்தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு வளர்ச்சியடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும்தான் முக்கியக் காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் முடிவுகட்ட வேண்டும். இவற்றை எதிர்த்து நாம் தைரியத்துடன் போராட வேண்டும். தேசத்தை பொருளாதார ரீதியாக வளமானதாகவும், கலாச்சார ரீதியாக வலுவாகவும், மூலோபாயத் திறன் கொண்டதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.

இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நீண்ட காலமாக வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இந்தியாவின் ஆயுதப் படைகளை ஆத்ம நிர்பர் ஆக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், ஐ.என்.ஏ. வீரர் லெப்டினன்ட் ஆர்.மாதவனை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் பர்வ் குடிமக்களை மையப்படுத்திய முன்முயற்சிகள், உள்ளூர், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குரல் கொடுக்கும்.

Tags: PM ModiRed FortdelhiParakram Diwascelebrations
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை!

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies