ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!
Jul 6, 2025, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பராக்கிரம் திவாஸ் (பராக்கிரம தினம்) கொண்டாட்டம் நடைபெற்றது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி ஒரு முன்மாதிரி. இன்று, நாட்டின் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் இந்தியத் தன்மையில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது.

நம் நாட்டை வளர்ச்சியடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எண்ணினார். ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதை நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால்தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு வளர்ச்சியடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும்தான் முக்கியக் காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் முடிவுகட்ட வேண்டும். இவற்றை எதிர்த்து நாம் தைரியத்துடன் போராட வேண்டும். தேசத்தை பொருளாதார ரீதியாக வளமானதாகவும், கலாச்சார ரீதியாக வலுவாகவும், மூலோபாயத் திறன் கொண்டதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.

இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நீண்ட காலமாக வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இந்தியாவின் ஆயுதப் படைகளை ஆத்ம நிர்பர் ஆக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், ஐ.என்.ஏ. வீரர் லெப்டினன்ட் ஆர்.மாதவனை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் பர்வ் குடிமக்களை மையப்படுத்திய முன்முயற்சிகள், உள்ளூர், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குரல் கொடுக்கும்.

Tags: Red FortdelhiParakram DiwascelebrationsPM Modi
ShareTweetSendShare
Previous Post

பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை!

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Related News

அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டி – குகேஷ் சாம்பியன்!

ஒடிசாவில் திருவள்ளூர் இளைஞர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – குவியும் பக்தர்கள்!

சிறப்பு‌ பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!

மணல் கொள்ளை வழக்கு – ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்a மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடல்? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies