ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!
Sep 14, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல், வாரிசு அரசியலுக்கு இளைஞர்கள் முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பராக்கிரம் திவாஸ் (பராக்கிரம தினம்) கொண்டாட்டம் நடைபெற்றது.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி ஒரு முன்மாதிரி. இன்று, நாட்டின் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் இந்தியத் தன்மையில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது.

நம் நாட்டை வளர்ச்சியடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எண்ணினார். ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதை நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால்தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு வளர்ச்சியடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும்தான் முக்கியக் காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் முடிவுகட்ட வேண்டும். இவற்றை எதிர்த்து நாம் தைரியத்துடன் போராட வேண்டும். தேசத்தை பொருளாதார ரீதியாக வளமானதாகவும், கலாச்சார ரீதியாக வலுவாகவும், மூலோபாயத் திறன் கொண்டதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.

இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நீண்ட காலமாக வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இந்தியாவின் ஆயுதப் படைகளை ஆத்ம நிர்பர் ஆக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், ஐ.என்.ஏ. வீரர் லெப்டினன்ட் ஆர்.மாதவனை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் பர்வ் குடிமக்களை மையப்படுத்திய முன்முயற்சிகள், உள்ளூர், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குரல் கொடுக்கும்.

Tags: PM ModiRed FortdelhiParakram Diwascelebrations
Share
Tweet
SendShare
Previous Post

பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை!

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies