இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு
Oct 25, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jan 24, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் விவகாரத்தில், கலவரத்தை உருவாக்கி, குளிர் காய தி.மு.க. பார்த்து கொண்டிருப்பதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு சந்திப்பு முதல் செங்கோட்டை வரை பயண தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட, ஈரோடு திருநெல்வேலி இரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு – திருநெல்வேலி விரைவு இரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பது செங்கோட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரயில் நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்வதால், வியாபாரிகள் வருவதற்கும், வியாபார பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இரயில்வே அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிவேகமான, பாதுகாப்பான, சுத்தமான இரயிலாக வந்தே பாரத் இரயில் உள்ளது.

இந்த வந்தே பாரத் இரயில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும், சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு இரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இரண்டு வந்தே பாரத் இரயில்கள் நின்று செல்கிறது.

வந்தே பாரத் இரயில் நமது உள்நாட்டு தயாரிப்பு ஆகும். குறிப்பாக, நமது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்கள், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய இரயில்வேயில் மிகப்பெரிய மைல்கல் புல்லட் இரயில். மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான, பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ், 75 இரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர், சேலம், காட்பாடி, மதுரை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 9 புதிய இரயில் தடங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, இரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை, வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே. ஆனா, இந்த ஒரு நிதியாண்டில் மட்டும், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வே திட்டத்திற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களையும் சேர்த்து, சுமார் 11 இலட்சம் கோடி அளவிற்கு, பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளார்.

இண்டி கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடையும்.

இராமர் கோவிலை மக்கள் விரும்பி கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர் காய முடியுமா என தி.மு.க. பார்த்து கொண்டிருக்கிறது.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Next Post

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies