மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!
Jun 5, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் 3 அடுக்குகளாக மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்க பா.ஜ.க.வினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க. இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை.

எனவே, இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்த கையோடு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில், உ.பி. மாநிலம் புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பா.ஜ.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தப் பேரணியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆகவே, இத்தேர்தலில் அதைவிடக் கூடுதல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Tags: PM Modielection compaignUttat Pradesh
ShareTweetSendShare
Previous Post

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

Next Post

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies