இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 06:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் விவகாரத்தில், கலவரத்தை உருவாக்கி, குளிர் காய தி.மு.க. பார்த்து கொண்டிருப்பதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு சந்திப்பு முதல் செங்கோட்டை வரை பயண தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட, ஈரோடு திருநெல்வேலி இரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு – திருநெல்வேலி விரைவு இரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பது செங்கோட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரயில் நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்வதால், வியாபாரிகள் வருவதற்கும், வியாபார பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இரயில்வே அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிவேகமான, பாதுகாப்பான, சுத்தமான இரயிலாக வந்தே பாரத் இரயில் உள்ளது.

இந்த வந்தே பாரத் இரயில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும், சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு இரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இரண்டு வந்தே பாரத் இரயில்கள் நின்று செல்கிறது.

வந்தே பாரத் இரயில் நமது உள்நாட்டு தயாரிப்பு ஆகும். குறிப்பாக, நமது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்கள், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய இரயில்வேயில் மிகப்பெரிய மைல்கல் புல்லட் இரயில். மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான, பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ், 75 இரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர், சேலம், காட்பாடி, மதுரை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 9 புதிய இரயில் தடங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, இரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை, வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே. ஆனா, இந்த ஒரு நிதியாண்டில் மட்டும், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வே திட்டத்திற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களையும் சேர்த்து, சுமார் 11 இலட்சம் கோடி அளவிற்கு, பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளார்.

இண்டி கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடையும்.

இராமர் கோவிலை மக்கள் விரும்பி கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர் காய முடியுமா என தி.மு.க. பார்த்து கொண்டிருக்கிறது.

Tags: minister l murugan
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Next Post

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies