இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு
Jun 15, 2026, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமர் கோவில் விவகாரத்தில், கலவரத்தை உருவாக்கி, குளிர் காய தி.மு.க. பார்த்து கொண்டிருப்பதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு சந்திப்பு முதல் செங்கோட்டை வரை பயண தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட, ஈரோடு திருநெல்வேலி இரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு – திருநெல்வேலி விரைவு இரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பது செங்கோட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரயில் நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்வதால், வியாபாரிகள் வருவதற்கும், வியாபார பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் இரயில்வே அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிவேகமான, பாதுகாப்பான, சுத்தமான இரயிலாக வந்தே பாரத் இரயில் உள்ளது.

இந்த வந்தே பாரத் இரயில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும், சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு இரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இரண்டு வந்தே பாரத் இரயில்கள் நின்று செல்கிறது.

வந்தே பாரத் இரயில் நமது உள்நாட்டு தயாரிப்பு ஆகும். குறிப்பாக, நமது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்கள், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய இரயில்வேயில் மிகப்பெரிய மைல்கல் புல்லட் இரயில். மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான, பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ், 75 இரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர், சேலம், காட்பாடி, மதுரை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 9 புதிய இரயில் தடங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, இரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை, வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே. ஆனா, இந்த ஒரு நிதியாண்டில் மட்டும், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வே திட்டத்திற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களையும் சேர்த்து, சுமார் 11 இலட்சம் கோடி அளவிற்கு, பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளார்.

இண்டி கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடையும்.

இராமர் கோவிலை மக்கள் விரும்பி கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர் காய முடியுமா என தி.மு.க. பார்த்து கொண்டிருக்கிறது.

Tags: minister l murugan
ShareTweetSendShare
Previous Post

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Next Post

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies