கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட  வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்ல மின்சார ரயில் வசதி இல்லை என்றும்,  அதேபோல் அதிக  எண்ணிக்கையில் மாநகர பேருந்துகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் அதே பேருந்து நிலையத்தில் உள்ள மாநகர பேருந்துக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டி  இருப்பதாகவும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில்,  கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற  அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்றும், இதனை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,  எனவே கோயம்பேட்டில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்  என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தனர்.

கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பேருந்துகளை  இயக்கக்கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர். அப்போது, அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், “தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை தினங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியிட்டு, 30-ம் தேதிக்குள் கோயம்பேட்டை காலி செய்யும்படி கூறினார்கள்.

தற்போது திடீரென கோயம்பேட்டில் இருந்து இயக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது? 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் எப்படி திடீரென இடத்தை மாற்ற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: killampakkamomini bus ownersgovt busesChennaiTamil Naduprivate buskoyembedu
ShareTweetSendShare
Previous Post

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

Next Post

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது: பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies